Thursday 26 February 2015

வார்த்தையும் வாழ்க்கையும்

காய்ந்த நிலத்தில் காலம் காலமாய் நான் கானல் நீர் ஊற்றிவருகிறேன் என்பதைப் போல் அல்லவா உள்ளது உன் வார்த்தை...
குறிஞ்சி நிலமாய் செழித்திருந்த என் வாழ்வை பாலை நிலமாய் மாற்றிய பாவியட நீ...
மந்தையில் செல்லும் மாடுகள் அல்ல மனிதர்கள்...
மதிக்க கற்றுக்கொள் மற்றவரின் மனதை...
மண் புழுவாய் மன்றாடினேன் மணவாழ்க்கைக்கு...
மதியற்ற நீ வீசி எறிந்தாய் என் மனதை...
மறந்து போகாது மதியற்ற உன்னோடு மனதாற உண்மையாய் இருந்த நாட்கள்...
மனித வாழ்வின் மகத்துவத்தை புரிந்து கொண்டேன் பிரிந்த பிறகு...

விஜி

No comments:

Post a Comment