Thursday 30 July 2015

காலத்தின் நாயகன் கலாம்

தமிழனை தலைநிமிரச் செய்த தன்னலம் அற்ற தாரகத்தளைவன்...
தனி ஒரு மனிதனாய் தமிழை தலை நிமிற உலக நாட்டின் பேச்சுறையின் போழுதும் தமிழை தாரக மந்திரமாய் தந்தார்.,
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என்ற வார்த்தையை தமிழ் இளைய சமுதாயத்திற்காக வாழ்ந்து காட்டிய தமிழன்.,
கலாம் ஐய்யா கண்டுபிடித்தது வெறும் ராக்கட்டையும் ஏவுகணையும் மட்டும் அல்ல எம்மண்ணின் இளைய சமுதாயத்தின் எழுச்சியையும் வளர்ச்சியையும் எழுப்பிவிட்டவர்.,
எங்கள் எழுச்சி நாயகன் மண்ணுல் புதைக்கப்பபடவில்லை எங்களுள் விதைக்கப்பட்டுள்ளார் அது இனி விரிட்சமாய் வளரும்...

தமிழன் என்பதில் பெருமிதம் கொல்வோம்...

எம் தமிழ் தாயின் மகன் இந்த வையகம் வாழும் வரை வாழ்வார்...

வாழ்க கலாம் ஐய்யாவின் புகழ்.,
அவர்கனவை நனவாக்க வாழ்ந்திடுங்கள்...

Friday 12 June 2015

தலைவன்

தலைவன் தன்முன் தலைவி தன்தால் படிந்தால், தங்கம் காலில் படக்கூடாது என்று எட்டிப்பித்த ஏன் தோல்களுக்கு என்ன செய்வதென்று அறியாமல் திகைத்தது, தித்திக்கும் தேன் வார்த்தைகளை திகட்டாமல் செவி மடுத்தேன், தெளிந்த நீரோடையின் தீன்டா தங்க மீனாய் தேடி எடுத்தாய் என் நெஞ்சை, நீ நான் என்றள்ள என்னவளே இனி நாம் நமது என்று மட்டுமே இந்த உலகம் மாறும் என்றுணர்த்தினான் என் தலைவன்., என்றென்னை சேருவாய் ஏங்கித்தவிக்கிறது என்னிதையம் என்னுயிரே என்னை சேர இன்னும் எத்தனை காலம் நான் காத்திருக்கவேண்டும்.???

விஜி

Wednesday 10 June 2015

வண்ணமய வாழ்வு

வண்ணத்துப் பூச்சியாய் வாழ்வில் வலம் வந்தேன்., எண்ணத்தில் எனக்கென்று எதுவும் நான் என்னியதுமில்லை, எலிமையாய் எனக்காக எல்லாம் என்று என்னுல் மனக்கோட்டை மலர்ந்தது., மலரின் வாசமாய் என் சுவாசமும் மாறிப்போனது., மண்ணுல் மறைந்தாலும் மாறாதது நம் பந்தம் நான் இனி என்றுமே உன் சொந்தம்

விஜி

வாழ்க்கையில் வண்ணம்

வரைந்த வாழ்க்கையில் வண்ணத்தை கூட்டி எண்ணத்தை என்னுல் ஏற்றி என்றும் அழியாத அழகிய ஓவியமாய் வரைய ஆசை கொண்டேன்., வாழ்க்கையில் வலிகளை தாங்க வருங்காலாம் எனக்கு முதலில் வழி விடுக்கிறது., வண்ணம் தீட்ட உனக்கு வழியில்லை முதலில் தடித்த இதையத்தை தேற்று என்றது., வார்த்தை வற்றி போகாமல் வாலிமையடையச் செய்வேன் வால்முனையான என் பேனாவின் மை வற்றும் வரையில்...

விஜி

Sunday 31 May 2015

இதயம்

அன்பின் அணிவகுப்பு.,
ஆசையின் ஓசை,
இசையில் இன்பம்., இவைகளை
ஈர்த்த இந்த இதையத்தின் இனிமையை என்னவென்று நான் சொல்வேன்.,
உயிர் உள்ளவரை உனக்காய் நான் மட்டும் என்றல்லாமல் நமக்காய் நாம் வாழ்வோம்.,
ஊரரிய உனைச்சேரும் நாளை
உளமேல்லாம் உற்று நோக்குகிறது.,
என் நெஞ்சை நீ அறிந்து என்னுல் வந்து சேரும் நேரத்தை எதிர்பார்த்து ஏங்குகிறேன் இந்த இதையம்.,
ஏற்றுக்கொள் என்னிதயத்தை ஏழ் ஐந்து ஜென்மங்கள் எடுத்தாலும் எம்முயிர் உனதாகட்டும்.,

விஜி

Wednesday 20 May 2015

மணிவேர்

கலைந்த மேகமாய் மறைந்துப் போகாமல் மண்ணின் மணிவேறாய் என்னுல் புதைந்திடு மழையும் வெய்யிலும் மனமுவந்து மருக்காமல் உஉனக்காய் ஏற்கிறேன்...  மலரின் வாசமாய் மனதில் உன்னை நேசிக்க மனம் நித்தமும் நினைத்தேங்குகிறது...
மனமே என்னை மறுத்துவிட்டு போகாதே நீ மறுத்தால் நான் மறுத்து மட்டுமே போவேன் மறு ஜென்மத்தில் மண்ணில் மனிதமாய் பிறவாமல் போக வரம் வேண்டுவேன் அந்த தேவனிடம்... மனதோடு வந்து சேர்ந்து மழைப்பால் என் மனதை குளித்திடு...

விஜி

Friday 8 May 2015

அழகு

ஆழகாய் பிறப்பது ஆனவமாய் வாழ அல்ல...
அழகின் ஆழம் அன்பில் மட்டுமே வெளிப்படுத்த இயலும்...
உலகில் உல்ல எல்லா உயிர்களுமே உண்மையில் அகஅழகை கொண்டுள்ளது...
அன்பின் வெளிபாடு அகத்தில் இருந்து அழகாய் வந்தால் போதும் அது எப்பொழுதுமே அழியாமல் வாழும்...
உலகில் உள்ள ஒவ்வொரு உயிரும் உன்னத அழகை தனக்கே உரிதாக்கி உருவாக்கப்பட்டுள்ளது, அன்பின் வெளிபாடும் அதனையே அடிப்படையாகக் கொண்டுள்ளது...

விஜி

Thursday 7 May 2015

வாழ்க்கை

அழகின் ஆழத்தை அங்கத்தில் காணாமல் , அகத்தில் காணும் ஆண்களுக்கு அழகான வாழ்வு அவருக்காக என்றுமே காத்திருக்கும்...

விஜி

Saturday 2 May 2015

உன் வருகையை எதிர்பார்த்து

உரங்காமல் உண்ணாமல் உன் நினைவால் நான் வாடும் வாட்டத்தைக்கண்டு எங்காத உன் மனதை எப்படி நான் மாற்றுவேன்.???
எவ்வாறு எவரோடு என் வாழ்க்கை பாதை உருவாகிறதோ என்று எண்ணி என் நாட்கள் பல உருண்டோடியது...
உள்ளத்தின் கல்வனை ஒரு போதும் நான் பிரிய மாட்டேன் என்று என் மனம் சொல்ல, தினமும் உன் முகம் தேடினேன்...
தேடலல் தளைவனைக் கண்டேன் தளர்ந்த என் நெஞ்சத்தை தாங்கிப் பிடித்த கரத்தை ககைப்பற்றும் நாளுக்காக நித்தமும் நான் ஏங்குகிறேன்...
அறிந்தும் அறியாத கல்வனாய் நீ காட்டும் நாடகத்தை கண்ணால் கண்டு கரைந்து கொண்டே போகிறது கருவிழிகளும்...
கனவு காதலன் கரை தொட்டு கண்முன் வந்தும் கரைந்து கொண்டிருக்கும் என் கண்ணீரை துடைக்க கரைப்புரன்டோடும் காற்றாறு வெள்ளமாய் வா என் காதல் கணவா...

விஜி

Wednesday 1 April 2015

வாழ்க்கைக்கு முக்கியம் வண்ணமா அல்லது நல்ல எண்ணமா?

கனவுகளுக்கு வண்ணம் இல்லை...
நினைவுகளுக்கு வண்ணம் கொடுக்க நீ இல்லை...
நிலைத்து நின்று நினைவுகளை நிஜப்பாடுத்த நினைத்தே நாட்கள் கழிகின்றன...
நீ வந்த இடமே நீ வளர்ந்த இடமோ நான் அறியேன்...
நீ எங்குள்ளாய் என்பதையும் நான் அறியேன்...
ஏங்கும் என் இதையத்திற்கு வண்ணம் ஒரு குறையானால் பிறவியின் பிழையை யாரால் இப்பொழுது மாற்ற முடியும்...
நிறத்தை உன் உடலில் நான் எதிப்பார்க்கவில்லை மனத்தில் மட்டுமே பார்க்க ஏங்குகிறேன்...
எண்ணங்கள் நம்மை வாழ்விக்கும் வண்ணங்கள் நம்மை தாழ்விக்கும்...

விஜி

Tuesday 31 March 2015

நினைவுகள்!?

நித்திரை கொடுக்க நினைவுகள் தடுக்க...
நிறைமதியும் குறை மதியாய் கூரும் கண்களுக்கு...
கனவெது நினைவெது என்று என்னிப்பார்க்காத அளவு என் நெஞ்சம் நித்தமும் உன்னை நினைக்கிறது...
நினைவுகளோடு வாழாமல் கனவுகளோடு படும் தவிப்பை கான முடியாமல் கலங்கும் கண்ணிற்கு கைதரும் உன்னை எங்கு காண்பேன்...?

விஜி

Monday 30 March 2015

தூது

அறியாத ஆசைகள் தெரியாமல் போகாது...
தூது சென்றது என் இதையம் அல்லவா...
தெளிவாய் பேசி தென்ரலாய் வருடி மட்டும் வரவில்லை உன் இதயத்தை திருடியும் வந்தது...
வாழ்வின் வழி வெள்ளி என்று வந்த வாஞ்சைத் தலைவன் நீ தானோ.,!

விஜி

Thursday 26 March 2015

அன்பு

ஆணுக்கு அழத்தெரியுமோ இல்லையோ...
ஒரு பெண்ணின் ஆசையினை அறியத்தெரியும்...
இது மட்டும் போதுமே ஆழிப் பேரலையாய் அலையும் ஆசைகளுக்கு ஆறுதல் ஒரு (ஆண்)துணை...
அதை அறிந்தவனுக்கு ஆயுல் முழுக்க அன்பை மட்டுமே பொழியும் ஓர் அர்ப்புத உயிர் "பெண்" ...

விஜி

Sunday 8 March 2015

பெண்

பெண் என்பது மென்- மையின் பெயராகும்
மனிதனாய் பிறந்த ஒவ்வொருவரும் வாழ்வில் பெண் இல்லாமல் இல்லை..
இந்த பூ உலகில் பிறக்கும் எல்லா உயிர்களுக்கும் பிறவியை தரும் ஒரு உத்தம உயிர் பெண்..
உன்னிலும் என்னிலும் உயிர் மூச்சாய் வாழும் ஓர் அழகோவியம் பெண்..
பெண்மையின் அழகும் மன ஆழமும் யாராலும் அளந்து அரிய முடியாது...
ஆழ்கடலாய் நம்முல் வாழும் அழகோவியங்களை வாழ்த்தமல் வணங்கி பெண்கள் தின வாழ்த்துக்களை அவர்களின் பாதங்களில் வைக்கிறேன்..


விஜி

Friday 6 March 2015

சூடு

கண்ணில் கண்ணீர் தந்தாய்..
 கதரி உன்னிடம் நான் கென்சவும் இல்லை..
 உன் காலிலும் நான்வும் விழுந்து கதரவும் இல்லை...
ஆனால் என் கண்ணீருக்கு நீயும் ஓரு காரணம்...
காலில் போடும் செறுப்பிற்கும் உயிர் உண்டு அது இறந்தால் உன் கால்களில்
கண்டது படும்...
அதே போல் வழ்வில் சிரிதேனும் சுரனையோடு வாழ கற்றுக் கொள்..
மனிதன் என்பதை மறந்து மண்ணாக வாழாதே....
மதியற்றவன் என்று உனக்கு பெயர் சூட்டி தெருவில் கூட நடக்க விடாமல் செய்து விடுவார்கள்...

Thursday 5 March 2015

அப்பா

தாயான தலைமகன் தந்தையைப் போல ஒரு தெய்வமுண்டோ.???
தன்னிகர் இல்லா தாய்மை உணர்வை தருபவர் தந்தை...
தன் பிள்ளையின் பெருமூச்சில் உள்ள காரணத்தையும் தான் முன்னமே அறிந்து தீர்ப்பவர்...
வாழ்வில் ஒரு ஆட்சியாளனாய் முதல் உதாரணம் தந்தை...
தான் தலை தழைக்க தரை தொட்டு வானம் வரை வளர போறடும் ஒரு உன்னத உயிர் தந்தை...
அப்பா.!!! ஆருதல் பல இருந்தாலும் அப்பாவின் பாசப்பிடியில் பலிர் என்று புண்ணகை அணிய வைக்கும் ஒரு அற்புத வரம் தந்தை...

விஜி

Tuesday 3 March 2015

அம்மா

பெண்!!! பெயரால் தோற்றத்தால் நான் பெண்ணானேன்...
பிறந்த நாள் முதல் இப்பிறவி முடியும் வரை நான் கொண்ட கடமைகுக்காக காலங்களை கழித்தேன்...
நான் என்று வாழாமல் தாம் என்று வாழும் ஒரு உன்னத உயிர் பெண்...
பிறக்கும் எல்லா உயிர்க்கும் பிறவி தரும் தவம் செய்யாம கிடைக்கும் வரம் அம்மா...
அ என்பது ஆதியும் அந்தமும் அடங்கும் அதன் அர்த்தமே அம்மா...
அகில உலகை காக்கும் ஒரு உயிர் உள்ளது உண்மையானல் அதன் உண்மை உருவம் அம்மா...
பிறவி கொடுத்த பேறுயிர் உனக்கு...எத்தனை பிறவி எடுத்தும் கடனாலி நான் உனக்கு அம்மா....

Monday 2 March 2015

காலம்

பின் நடக்கப் போவதை எண்ணி பின் நோக்கி வாழ்வதை விட இன்று என் கையில் என்று எதிர் பார்க்காமல் வாழ்ந்து பார்...!!
உலகம் உன்னுடையதாகும்...
ஒவ்வொரு நிமிடமும் காற்றில் எழுதப்படவில்லை கலைந்து செல்ல...!!!
கற்கலில் செதுக்கியதற்கு ஈடாகும் காலம் கடந்தாலும் நாம் கடந்து வந்த பாதையை எண்ணிப்பார்க்க இருக்கும்...
இறைவன் கொடுத்த வாழ்க்கையை ஏலனமாய் எண்ணாமல் இன்று உன்னால் முடிந்ததை செய் இயல்பாகவே உனக்கு கிடைக்க வேண்டியது நிச்சயம் கிடைக்கும்...
இனி இறந்த காலத்தை எடுத்துப் போட்டுவிட்டு....
இருக்கும் காலங்கலை இனிதாய் வாழ்வோம்...

விஜி

Sunday 1 March 2015

நினைவுகள்

நேற்றைய நினைவுகள் நாளைய நிஜங்களாய் மாறலாம்...!?
ஆனால் நீ இல்லாத நாளை நினைத்துப் பார்க்கவும் இயலாது...
நீ தந்த நினைவுகளை நீட்டிப் படிக்க நிச்சையம் நூறு ஜென்மங்கள் எடுக்க வேண்டும்...
எதைநான் பிடித்து வந்தேன் என்றறிவேயேன்..?
பின் நோக்கிச் சென்றாலும் பிழையும் ஆகாது பிரிக்கவும் முடியாது உன் நினைவுகளை...
உன் உயிர் உள்ளவரை உன் உள் உணர்வாய் நான் உயிரோடே தான் இருப்பேன்...

விஜி

Saturday 28 February 2015

நிழல்

நிழலில் நிஜத்தைக் கண்டேன்
நீ எதிரில் நின்ற போது எரிமலையும்
எச்சில் துப்புகிறது என்று ஏலனமாய் பேசினேன்...
என்றோ தோன்றும் பூகம்பத்தை
எதிரில் பார்த்தவனைப் போல இடிந்து போனது என் இதயம்
ஏன் என்று தெரியுமா?
இரவில் என் நிழல் என்னைப் பிரிவதைப் போல !!!
நீ என்னை விட்டுச் சென்றதால்...
இதயத்தில் இருந்து நீங்காத என் உயிராய் உன்னை ஏற்ற என் இதயத்துக்கு எதைச் சொல்லி புரியவைப்பேன்?

விஜி

நிம்மதி

நினைத்த வாழ்க்கை கிடைத்துவிட்டால் நிம்மதி பெறுமூச்சி வரும்...
நினைத்து பார்க்கத படி நீ என்னை விட்டுச் சென்றால் நிரந்தரமாகவே நின்ரே போகும் என் மூச்சி...
நிம்மதி நிறைந்த வாழ்க்கையை வாழ வழி தேடி அலைகலாய் அலைந்து கொண்டிருக்கும் என் நெஞ்சை நெருங்கி நீ வரும் நாளுக்காக நிதானமாய் நான் காத்துக் கொண்டு இருக்கிறேன்...

விஜி

Friday 27 February 2015

அவள்

சட்டென்று சாய்த்தால் மை விழியால்...
மாறிப்போனது மாந்தர் மனம்.,
மஞ்சள் பூசி மாசி மாதம் மாலை சூரியன் போல் ஒளி வீசிய பலிர் முகத்தில் வரும் வியர்வையாய் நான் மாறக்கூடாதா என்று ஏங்கவைத்தாள்...

என்னுயிர் எழுதிய இறைவனிடம் ஏட்டை பிடிங்கி இவளுக்காக ஒரு உலகத்தை உருவாக்க ஆசை கொண்டேன்...

என் வீட்டு ஜன்னல் நிலாவாக நீ நடந்தால் நீண்டு கிடப்பேன் நிலமாக, உன் நிழலாவது என் மேல் படாதா என்று ஏங்கி.!!!

விஜி

Thursday 26 February 2015

வார்த்தையும் வாழ்க்கையும்

காய்ந்த நிலத்தில் காலம் காலமாய் நான் கானல் நீர் ஊற்றிவருகிறேன் என்பதைப் போல் அல்லவா உள்ளது உன் வார்த்தை...
குறிஞ்சி நிலமாய் செழித்திருந்த என் வாழ்வை பாலை நிலமாய் மாற்றிய பாவியட நீ...
மந்தையில் செல்லும் மாடுகள் அல்ல மனிதர்கள்...
மதிக்க கற்றுக்கொள் மற்றவரின் மனதை...
மண் புழுவாய் மன்றாடினேன் மணவாழ்க்கைக்கு...
மதியற்ற நீ வீசி எறிந்தாய் என் மனதை...
மறந்து போகாது மதியற்ற உன்னோடு மனதாற உண்மையாய் இருந்த நாட்கள்...
மனித வாழ்வின் மகத்துவத்தை புரிந்து கொண்டேன் பிரிந்த பிறகு...

விஜி

காற்றில் கலையாது காதல் நினைவுகள்

காலங்கள் கடந்தாலும் கண்ணெதிரே தோன்றிய காட்சிகள் கரையாது...
கற்களில் செதிக்கி கண்ணிரால்  வரைந்த நாட்கள் அவை...
கானல் குளமாய் கண்ணில் வைத்தேன் உன் நினைவுகளை காணாமல் போகச்செய்யாதே...
கலைத்துச் செல்ல காற்றில் எழுதிய கதையல்ல அது கல்லான என் நெஞ்சில் வரைந்த ஓவியம் ...
காதலனாகவோ தோழனாகவோ  உன்னை நினைக்கவில்லை அதினும் மேல் சென்று கடவுளாக கற்பனையில் கனவுகளில் வாழ்ந்தேன்.,
அதையும் அழித்துச் செல்ல ஆசை கொண்டால் எடுத்துச் செல் என் உயிரையும் உன்னோடே...
விஜி

Tuesday 24 February 2015

மன நிலை தடுமாற்றம்

நிலை தடுமாறுகிறது என் நெஞ்சம்...
நிலைப்பட மறுக்கிறது நினைவுகள்...
நேசசிக்க நெஞ்சம் இருந்தும், நெருங்கிய சொந்தம் எனக்கில்லை என்கிறது...
அடிமையா அல்லது அனாதை யயா நான்.?
விழைந்து செய்த வேலையும் வெற்றுத்தாளாய் மாறக் காரணம் நானா.?
நிம்மதி இல்லாமல் நாள்களை கழிப்பதைவிட நின்று போகட்டும் என் மூச்சி...

விஜி

வின்மீன்கள்

வானத்து வின்மீன்கள் வலையில் விழாதா என்று எங்கினேன் ...
வரப்போவது வனதேவதை என்று தெரியாமல் போனது...
வந்தாய் என் வாச மல்லி கோடியாக...
வாரியனைக்க கைகள் துடிக்கிறது...
வந்து என்னை பின்னிக்கொல் என் வாசக் கொடியே...
நீ வராமல் போனால் நான் இராமல் போவேன் என் வானத்து நிலாவே...

விஜி..

மன அழுத்தம்

மனஅழுத்தம் மனிதனை மிருகமாக்கும்...
மண்ணையும் மறந்து தன்னையும் மறக்கும் மன நிலைக்கு கொண்டு செல்லும்...
நினைவுகள் நிலைப்பாட்டை மறக்கும்...
மனஅழுத்தம் பலரை மரண நிலைக்கும் கொண்டு செல்லும்...
மற்றவர் தன்னிலை அறிந்து செயல்பட்டால் நல்லது என்று தோன்றும்...
ஆனால் யாறும் உன்னிலை அறியார்...
விலையற்ற உன் உயிரையும் பதம் பார்க்கும் ஒரு ஆயுதம் மனஅழுத்தமே...

விஜி

Monday 23 February 2015

பின்புத்தி

தன்னிலை அறியாது பிறரின் குறையை மட்டும் பின் நின்று தேடும் பின்புத்தி மனிதர்களிடம் மட்டுமே உள்ளது...
திறமை உள்ளவன் ஒரு போதும் தற்பெறுமை சொல்தில்லை...
பிறர் தம் பெறுமையை சொல்லும் அளவிற்கு உழைப்பார்கள்...
ஒருவரை புறம் பேசுவதை விட்டு, அகத்தில் தூய உள்ளத்தோடு செயல்படு, நீ வெற்றியடைய இறைவனே உனக்கு வழிவகுப்பான்..

விஜி

Saturday 21 February 2015

நெஞ்சில் உன் நினைவுகள்

நித்திரை நான் கொண்டேன்...
உன் நினைவுகள் என்னை ஆட்கொண்டது...
உள்ளத்தில் ஊரிக்கிடக்கும் உன் ஞாபகத்தை ஒருபோதும் உலர்த்த முடியாது...
நீ உடுத்திம் நூலாடையும் எனக்கு பட்டாடையாய் பளிங்கிட்டது...
காலில் கால் கொலுசு என் கல்யாண இசைபோல் தோன்றுது...
கற்றை கூந்தலில் ஒற்றை ரோஜவும்
உலகத்து பூக்கூட்டத்தின் மணத்தை தந்தது...
நீதான் என் நித்தமும் நிறைந்து வாழும் நிறைமதி என்பதையும் நான் உணர்ந்தேன்...
நித்தில் குழிட்டு புதைத்தாலும் நெஞ்சை விட்டு அகலாது உன் நினைவுகள்...

விஜி

Wednesday 18 February 2015

ஆசையில்...

நெஞ்சில் சாய்ந்து நினைப்பதை பேச நித்தமும் ஆசை கொண்டேன்...
நெறுங்கி வரும் போதெல்லம்
நினைவுகளும் வலுப்பட்டுக் கொண்டே போகிறது...
நிஜத்தை அறிந்தும் அறியாதவனை போல நீ காட்டும் வித்தைகளை நானும் இரசித்துக் கொண்டுதான் இருக்கிறேன்...
நீ ஒருநாள் என்னை போல் நெஞ்சத்தின் ஆசையோடு அலைந்தோடி வருவாய் அன்று என்னிலை நான் அறியேன்...
நெருப்பில் சுட்டாலும் உன் நீனைவுகள் ஒருபோதும் என்னை விட்டு பிரியாது...

விஜி

Tuesday 17 February 2015

தாயான தங்க நிலாவே

நாடி நரம்பு தெரிக்க தாயாய் மாறி என்னை ஈன்றாள்...
தங்க தொட்டிலில் தாலாட்டு பாடும் நிலையில் அவள் இல்லை ...
அவள் புடவையில் தூலி கட்டி என்னை தூங்க வைத்தாள் ...
தலையனையாய் தாய் மடியினைத் எனக்கு தந்தாள்..
தட்டி தடுமாறும் தன் மகள் பொற்பாதம் புண் படுமோ என்று தன்கையால் தாங்குவாள்...
தன் தலையில் எண்ணை  இல்லாமல் போனாலும் என் மகளை எம்பி .பி .எஸ் படிக்க வைப்பேன் என்பாள்...
தடைபோட்டு நிறுத்த முடியாதது தாய் பாசம்
தளர்ந்து போனவயதிலும் தளறாதது தாய் பாசம் ஒன்றுதான்...
தாயன தங்க நிலா நீ தான்
அம்மா
தஞ்சமாய் தலைவைத்து தூங்க ஏங்கும் உன் பிள்ளை நிலா நான் தான்...

விஜி

மலரே

பனியில் மலர்ந்த கானல் நீர்த்துளி அல்ல நீ எனக்கு....
காட்டில் மலர்ந்த காந்தல் மலர் அல்ல நீ எனக்கு...
என் நெஞ்சில் பூத்த நித்திய மலர் நீ எனக்கு....
நித்தமும் உன்னையே என் உயிர் மூச்சாக சுவாசிக்கிறேன்...
உன் வாசம் மறைந்தால்
என் சுவாசமும் மறையும்...

விஜி

மலரின் மனமே

பனியில் மலர்ந்த கானல் நீர்த்துளி அல்ல நீ எனக்கு...
காட்டில் மலர்ந்த காந்தல் மலர் அல்ல நீ எனக்கு...
என் நெஞ்சில் பூத்த நித்திய மலர் நீ எனக்கு...
நித்தமும் உன்னையே என் உயிர் மூச்சாக சுவாசிக்கிறேன்...
உன் வாசம் மறைந்தால்
என் சுவாசமும் மறையும்...

விஜி

Friday 13 February 2015

கல்வி

கருத்துக்கள் காகிதத்தில் மட்டும் இருந்தால் என்ன பலன் ?
கருத்து அறிந்த மனிதர்களாக வாழ்வதே மிகச் சிறந்தது...
கல்வி காகிதத்தில் உள்ளதை நமக்கு கற்பிக்கும் ...
அதை நாம் தான் பொருளறிந்து வாழ்கையிலும் பயன்படுத்த வேண்டும்...

விஜி

Thursday 12 February 2015

தேவதையே

வானத்தில் விண்மீன் வா என்று அழைப்பதைப் போல உன் வாயின் வார்த்தைக்காக வானம் பார்த்த பூமியாய் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன் ....
வா என் தேவதையே வாழ்க்கையை வாந்து காட்ட வழிதேடுவோம்
இருவரும் சேர்ந்து ...
தனிமையில் வாட என் வாழ்க்கையும் வயதும் மறுக்கிறது...

விஜி

Friday 6 February 2015

காதல்

காதல் கண்ணில் கண்டேன்...
கனிவை கண்ணில் கண்டேன் ...
கரிசனம் கண்ணில் கண்டேன்...
கருவிழியில் என்னைக் கண்டேன்...
கண்டதெல்லாம் கனவாய் போகாமல்...
காட்சிப்படுத்த உன் கரம் பற்றுவேன்...
விஜி

Thursday 5 February 2015

தலைகனம் விடு

திறமை தாண்டி
தலைவன் போல்
தலைகனம் கொண்டவர்கள்
தலைகீழ் நின்றாலும்
தலைவனாகிவிட முடியாது
தலைவிதி அவனை
தலைகீழே தல்லி
தலை நிமிரவிடாமல் செய்துவிடும்
தலைகனம் விடுத்து தன்னை நம்பினோர்க்கு தங்களால் இயன்றதை செய்வோம்...

விஜி

Thursday 29 January 2015

இரவுகள்

இரவுகள் இல்லாமல் இனிமை இல்லை...
இனி நீ இல்லாமல் நான் இல்லை...
நீண்ட நாள் தொடரும்
தொடுவானம் நீயானலும்
உன்னை துரத்தும் ...
வெண் மேகம்
நானாவேன்...
விஜி

Wednesday 28 January 2015

இயற்கை அன்னை

பயணத்தில் பட்ட பனி துளி கூட பன்னீர் துளியாய் மாறி பட்டுத்தாம் பரமாய் படர்ந்து கிடந்த பச்சை இலைகளின் மேல் நடந்தேன் பல வண்ண மலர் தூவி வரவேற்றாள் என் இயற்கை அன்னை
விஜி

Monday 26 January 2015

எல்லை காக்கும் எம்முயிர் தோழர்களுக்கு

நாட்டின் எல்லையில் நின்று
வீடற்று வெகுதூரமாய் இருந்தும்
விண் மீன்களின் வெளிச்சத்தை வெண் மனதோடு ஏற்று
வெகு தூரத்தில் உள்ள தன் உறவுகளை
வெண் நிலாவில் தடம் பதிப்பதை போல் பார்த்துச் செல்லும்
என் நாட்டின் வீரமிக்க மன்னர்களை வாழ்த்த வயதில்லாமல்...
வணங்குகிறேன்...
குடியரசு தின வாழ்த்துகள் தோழர்களே...

விஜி

குடியரசு தினம்

கூட்டு குடும்பமாய் வாழும்
எம் நாட்டின் தோழமை நண்பர்களுக்கு 66 ஆம் ஆண்டு குடியரசு தின வாழ்த்துக்கள்...

விஜி

Saturday 24 January 2015

வளர்ந்து வரும் பெண் சமுதாயம்

யாரடிமை இந்த நாட்டில்….,

விலங்கிட்டு, வேலியிட்டு,

பூட்டி வைத்த பூட்டை உடைத்தெறிந்து,

தடைகள் அனைத்தும் தகர்த்தெறிந்து,

உறுதியோடு தலைநிமிர்ந்து,

தாயகம் காக்க தழைத்தெழுந்த,

தங்கத்தாரகைகள், எம்நாட்டின் பெண்கள்.

அடிமைத்தனம் அழித்து ஆளவந்த பூமியில், ஆண்களுக்கு நிகர் நாங்களும் உள்ளோம் என உரக்கச் சொன்னவர்கள், எம் முன்னோர்கள்.

பாரதி கண்ட புதுமைப் பெண்களாய், எம் நாட்டில் விழித்தெழுந்தது 1956க்குப் பின்பு,

நாட்டில் எந்தத் துறையில் இல்லை எம் பெண்கள்.

காலம் கடந்து, கண்ணீர் துடைத்து, கலங்கரை விளக்காய் நம் வாழ்வின் உதாரணமாய் நின்றவர்கள் பலர்.

முத்துலட்சுமி ரெட்டி, சரோஜினி நாயுடு, வீரமங்கை வேலு நாச்சியார் இன்னும், இன்னும் பலர் உள்ளனர்.

அன்று முதல் இன்று வரை அன்பிற்கு இலக்கணமான அம்மா என்று மட்டும் இல்லாமல், அனைத்து துறைகளிலும் தனக்கென தனி முத்திரை பதித்தவர்கள் பெண்கள்.

அரசியலா, அறிவியலா, ஆராய்ச்சியா அனைத்து துறைகளிலும் தடம் பதித்து, தங்களது தனித்துவத்தால், சரித்திரத்தில் இடம் பிடித்தவர்கள் எம் சாதனைப் பெண்கள்.

இப்பெண்கள் கூட்டம் ஒன்றாய் திரண்டு, அகில உலகையும் அன்பு மயமாக மாற்றும் நாள் வெகுதூரத்தில் இல்லை.

விஜி

மதி முகமே

முழு மதியை கார் மேகம் மறைப்பதைப்
போல...
உன் முழு முகத்தை
உன் கார் கூந்தல் மறைத்தது
மறைத்தது உன் முகத்தை மட்டும் அல்ல...
என் காதலையும் தான்...

விஜி

அம்மா

பெற்றெடுத்து பிறவி கொடுத்து பிறை நிலா காட்டி பால் சோறு உட்டுவாள்...
உன் சிரிப்பில் சிறிதேனும் சலனம் இருந்தாலும் ...
சட்டென்று அறியும் ஆராய்ச்சியாளர் ஆகிறாள்..
அவளைவிட பெரிய தெய்வம் வேறுண்டோ???
அம்மா ...
விஜி

Thursday 22 January 2015

அன்புள்ள அப்பா....

தாய்மடி அன்பை என் 
தந்தையிடமும் நான் கண்டேன் ... தான் 
ஆண் என்பதையும் மறந்து 
தாய்பாசத்தில்... பிள்ளையிடம் 
தாயாய் மாறும் தூய அன்பு 
”தந்தை”...

-விஜி