Wednesday 29 August 2018

பெண்பிள்ளை பெற்றதில் பெருமிதம்

அழகாய் அவள் ஆழப்பதிய உதிர்த்த முதல் வார்த்தை *அம்மா* .....
மழலை மொழி கொண்டு மனதை மயக்கும் மர்மம் கற்றவள் அவள்...
மண்ணில் பிறந்த நான் மாலாத இன்பத்தை மனதார அனுபவிக்க வரம் தந்த தேவதை .....
*பெண்பிள்ளை பெற்றதில் பெருமிதம் கொல்வோம்* .....

(விஜி)
பொதுவாக பெண்பிள்ளை பெற்றவர்கள் அவர்கள் ஆடை, ஆபரணங்களை அணிந்து கொண்டால் அதை அவர்களுடைய பெற்றோர் இரசிப்பதுண்டு.,
ஆனால் அன்னேரம் நமக்கு குச்சமும் வந்து ஏன் என்னை இப்படி பாக்குரீங்க இதுக்கு முன்னாடி இந்த முகத்த பார்த்ததே இல்லையானு கண்டபடி வசை பாடினதுண்டு, ஆனால் அதன் அர்த்தம் , நான் ஒரு பெண்பிள்ளையை பெற்று அவளை அலங்கரித்து பார்க்கும் போது என்னையும் அறியாமல் அவளை பார்த்தபடியே நிர்க்கும் போதுதான் புரிகின்றது.....

தாய்மையும்( பெண்ணையும் ) பெற்றவர்க்கே கிடைக்கும் பேரானந்தம் .....

(விஜி)